
சுவடுகள்
A Bapasi -SICCI Initiative to help connect writers and publishers.
தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை (SICCI)கூட்டாக இணைந்து யாதும் ஊரே என்கிற பன்னாட்டு மாநாடு ஒன்று நடத்த உள்ளது. உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தமிழ்நாட்டுடன் இணைத்து அவர்கள் பற்றுதலை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
http://ieeeyesist12.org/global_hackathon/
அதில் ஒன்றாக உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களையும் தமிழ்நாட்டிலுள்ள பதிப்பாளர்களையும் இணைக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை ஒருங்கிணைக்க நம்முடைய பபாசி அமைப்பு பணிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றனர்.
அத்தகைய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்கள்தம் படைப்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் சென்றடையும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த பதிப்பாளர்களுடன் இணைக்கும் வகையில் முதல் முறையாக மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்த எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு புதிய படைப்புகளை உருவாக்குவோம். புத்துலகை படைப்போம்.
நிகழ்ச்சிகள்
மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வதில் பபாசி மிகவும் பெருமை கொள்கிறது.
போட்டிகள்
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.
விருதுகள்
ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு. மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கு வழங்கப்படுகிறது
Chennai Book Fair Live
Use hash tag #cbf2020 in twitter and @bapasi in FB to feature in our exclusive Social Media Live Feed
சென்னை புத்தக காட்சி பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..








காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த நூல்களே

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு..

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
